காதல் என்பது இருவர் மனக்கிளர்ச்சி. நரம்புகளின் தந்தி நாதம். சந்திப்புகளை நேசிக்கும் நாடித்துடிப்பு. கற்பனை வரிகளைக் கடன் வாங்காமல் பேச்சில் சிந்தும் தேன்துளிகள். எதிர்கால வாழ்விற்கு ஓத்திகைப் போடும் நாடக அரங்கேற்றம். வெற்றியினைநோக்கி பயணிக்கும் விண்ணூர்தி. முத்தங்களுக்கு தவிக்கும் உதடுகளின் இனிமை. உடல்சிலிர்ப்பின் மென்அதிர்வு. காமத்தைச் சுவைக்க இரவு நேரத்தில் மலரும் காமத்துப்பூ.
ந க துறைவன்.
காதலர் தினம்
No comments:
Post a Comment