அஸ்தியை
கடல் நீரில்
– உள்
அமுக்கியதும்
மேலெழுந்து
மிதந்து மிதந்து
முன்னும்
பின்னும்
அலைகளில்
அலைகழிந்து
மெல்ல மெல்ல
கரையத்
தொடங்கியது
அந்த
அஸ்தியின்
வாசம்
பிடிக்காமலோ
என்னவோ
விலகி விலகி
ஓடின
மீன்கள்!
---
கிராமங்களில்
அவ்வளவு
கண்டிப்புடன்
கடைபிடிக்கிறார்கள்
காலம்
காலமாய்
மாலை நேரம்
விளக்கு
வைச்சதும்
கைமாத்தாய்
எவருக்கும்
எவரும்
கொடுப்பதில்லை
சமையல்
உப்பு.
கவிதா
மண்டலம்-இதழ்
சனவரி 2013.
No comments:
Post a Comment